Friday, August 10, 2012

கொஞ்சமா எழுதிக்கிறேன்... :)

சென்ற வாரம் தமிழக முதல்வர் தந்தத் தாரகை அம்மா ஒரு அறிவிப்பு வெளியிட்டு நிறைய பொதுமக்களின் வயிற்றிற்கு பால் வார்த்து கண்களுக்கு குளிர்ச்சியை வழங்கினார். இனி எங்கும் ப்ளக்ஸ் பேனர்களில் அம்மா, எம்.ஜி.ஆர், அண்ணா படத்தைத் தவிர வேறு இருக்கக் கூடாது என்று.. மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. தெருக்களை அடைத்து, கடைகளை மறித்து அமைக்கப்பட்ட பேனர்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.. அம்மா இந்த கொள்கையில் ‘வழக்கம் போல்’ உறுதியா இருக்கட்டுமாக.. அதோடு இன்னொரு நல்லதும் செய்தால் மக்கள் மிக மகிழ்வார்கள்... இனி கல்யாண ப்ளக்ஸ்களில் மணப்பெண்-மணமகள் போட்டோக்களைப் போடக் கூடாது என்று.. கல்யாண சீசனில் தெருக்களை அடைத்து 15 , 20 அடி அகல நீளங்களில் வாழ்த்து பேனர்... மணமக்கள் ஜோடியாக.. பார்ப்பதற்கே பயமாக இருக்கின்றன... அதை பார்த்து வாழ்த்த மனம் வரா விட்டாலும் திட்ட வைக்காமல் இருக்கலாம்... சில இடங்களில் விரசமான மேக்கப் ஆடை அலங்காரங்களுடன்.. பார்க்கவே அருவருப்பாக இருக்கின்றது.
உன் கிட்ட லட்டையே ஒப்படைக்கிறோம். அது எப்பவும் ஸ்வீட்டாகவே இருக்கனும்
இது ஒரு திருமண வாழ்த்து போஸ்டர்... பஸ்ஸில் என்னுடன் அமர்ந்து இருந்த ஒரு சகபயணி சொன்னார்... காராச்சேவு மாதிரி இருக்கு... இது லட்டாம்ல... ஒய் திஸ் கொலவெறி... :-) &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& உலகம் இயங்குவதே உணவைக் கொண்டு தான்.. அந்த உணவைத் தயார்படுத்த விவசாயம் முக்கியம்.. விவசாயம் செழிக்க மழை அத்தியாவசியம்.. நம் முன்னோர்களின் இயற்கையான நீர்ப்பாசன முறைகளை நாம் சிதறடித்து விட்டதால் இன்று மழை பெய்தால் தான் விவசாயம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம்.. அது பொய்க்கும் போது ஏற்படும் விளைவுகள் கொடூரமாக இருக்கின்றன. மழை இல்லையென்பதால் விவசாயம் செய்ய முடியாத நிலை.. விலைச்சலும் இல்லை... விலையும் இல்லை எனும் போது பணப்புழக்கம் குறைகின்றது... இந்த ஆண்டு எங்கள் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை முழுவதும் பொய்த்து போய் விட்டது. வைகை, பெரியார் அணைகளில் தண்ணீர் இல்லை.. விவசாயம் தொழில்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன. குடிக்கும் தண்ணீருக்கே பஞ்சம் வரும் சூழல்.. கொஞ்சம் ஆதரவாக இந்த வாரம் மழை சிறிது பெய்யத் துவங்கி உள்ளது. இறைவனிடம் வேண்டிக் கொள்வோம். &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& ஆகஸ்ட் 6 ந்தேதியை உலகம் மறந்து இருக்கலாம்.. அணு ஆயுத தாக்குதலால் உலகமே அதிர்ந்த நாள்... அதைப் பற்றிய எந்த பிரஞ்யையும் இல்லாமல் இந்திய ஜனநாயக நாடு அணு உலைகளை அமைத்து வருகின்றது. மக்களின் எதிர்ப்புகளை எல்லாம் காமெடியாக்க சில காமெடி அமைச்சர்களை அதற்க்காகவே வைத்து இருக்கின்றது. அணு ஆயுதங்கள் தயாரிக்கும் நோக்குடன் வெளிப்படையாக அணு மின்சாரம் என்ற அஜெண்டாவை வைத்து இருக்கும் இந்த ஜனநாயக அரசுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை... கூடங்குள மக்களின், இயற்கை ஆர்வலர்களின் எதிர்ப்பை மீறி அங்கு அணு மின்சாரம் தயாரிக்கும் ஆர்வம் அழிவை நோக்கி செல்லாமல் இருக்கனும்.. இன்னும் 15 நாளில் மின்சாரம் தயாரிக்க ஆரம்பிப்போம் என்று கடந்த ஒரு வருடமாக வாய்தா வாங்கிக் கொண்டு இருக்கும் நாராயணசாமி போன்ற மாண்புமிகுக்கள் இருக்கும் வரை எதுவும் அரசு இயந்திரங்களால் சாத்தியப்படும். &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&