Monday, March 31, 2008

பாக். பார்லிமெண்ட் நிகழ்ச்சி - முதல் பெண் சபாநாயகர்


சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பல குழப்பங்களுக்குப் பிறகு மறைந்த பெனாசிரின் PPP யைச் சேர்ந்த பஹ்மிதா மிர்சா சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பிரதமராக யூசுப் ராஜா கிலானியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நேற்று பாகிஸ்தான் பாராளுமன்ற நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்ட்சியில் காண நேரிட்டது. சரி அங்கு என்ன தான் நடக்கிறது என்று பார்த்தால் “சுரைக்காய்க்கு உப்பில்லை” என்பது போல் தான் இருந்தது....:( நீங்களும் பாருங்கள்...

ஆனால் சண்டைக் காட்சி ஏதும் கிடைக்கலை... :( இந்தியப் பாராளுமன்றம் போல அங்கும் சபையில் மொத்தமே 15, 20 பேர்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Saturday, March 29, 2008

கொள்ளை அடித்து வித்தியாசமாக மாட்டியவர்கள்... :)

குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, ஓடும் பஸ்சில் அரிசி வியாபாரியிடம் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையடித்த பஸ்சிலேயே மீண்டும் ஏறிய போது கொள்ளையர்கள் பிடிபட்டனர்.
அரிசி வியாபாரி
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர், சேகர் (வயது 46). அரிசி வியாபாரி. கேரளாவில் விற்பனை செய்த அரிசிக்கான தொகை ரூ.5 லட்சத்தை வசூலித்துக்கொண்டு, குருவாயூரில் இருந்து இரவு 9 மணி அளவில் சேலத்துக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். பணத்தை சேகர் ஒரு துணியில் சுற்றி இடுப்புடன் சேர்த்து கட்டி இருந்தார்.
பஸ் திருச்சூர் வந்தபோது 2 பேர் அந்த பஸ்சில் ஏறினார்கள். அவர்கள் வியாபாரி சேகரின் அருகில் வந்து அமர்ந்துகொண்டனர். கோவைக்கு செல்லவேண்டும் என்று டிக்கெட் வாங்கினார்கள்.
குளிர்பானம் கொடுத்தனர்
அவர்கள் இருவரும் வியாபாரி சேகரிடம் பேச்சு கொடுத்தனர். நாங்கள் நெல் புரோக்கர் என்று அறிமுகம் செய்து கொண்டனர். அதனால் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பஸ் கோவைக்கு வந்தும் அந்த 2 பேரும் பஸ்சை விட்டு இறங்கிச்சென்று குளிர்பானம் குடித்தனர். சேகருக்கும் குளிர் பானம் வாங்கிக்கொடுத்தனர்.
கோவை வரையில் தான் அவர்கள் 2 பேரும் டிக்கெட் வாங்கி இருந்தனர். மீண்டும் பஸ்சில் ஏறிக்கொண்ட அவர்கள், கண்டக்டரிடம் அவினாசி வரைக்கு டிக்கெட் வாங்கினார்கள். அவினாசிக்கு வந்த பின்னர் மீண்டும் ஈரோட்டுக்கு என்று 2 டிக்கெட் கேட்டனர். இதனால் குழம்பிப்போன கண்டக்டர் சுப்பிரமணி, ஏன் இப்படி ஊர் ஊராக மாற்றி மாற்றி டிக்கெட் எடுக்கிறீர்கள்? ஒரேயடியாக சேலத்துக்கு டிக்கெட் எடுத்து இருக்க வேண்டியதுதானே என்றார். அதற்கு பதில் அளித்த அந்த 2 பேரும், எங்கள் லாரி வழியில் விபத்துக்குள்ளாகி நின்று விட்டது. அது எங்கு நிற்கிறது என்று தெரியவில்லை. அதனால்தான் இப்படி டிக்கெட் எடுத்தோம் என்றனர்.
ரூ.5 லட்சம் கொள்ளை
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே பஸ் வந்தபோது ரோட்டு ஓரத்தில் ஒரு லாரி விபத்துக்குள்ளாகி நின்றது. உடனே அந்த மர்ம மனிதர்கள் இருவரும், அதுதான் எங்கள் லாரி, இங்கேயே நாங்கள் இறங்கிக்கொள்கிறோம் என்று கூறி நடு வழியில் பஸ்சை நிறுத்தி இறங்கிக்கொண்டனர்.
பஸ் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கண் விழித்த வியாபாரி சேகர், தன் இடுப்பில் கட்டி வைத்திருந்த பணத்தை காணாமல் திடுக்கிட்டார். உடனே கண்டக்டர், டிரைவரிடம் இது பற்றி கூறிய சேகர் அருகில் இருந்த 2 பேரை எங்கே? என்று கேட்டார். இருவரும் விஜயமங்கலத்தில் இறங்கி விட்டனர். ஏன் என்ன விஷயம்? என்று அவர்கள் திருப்பிக் கேட்டனர். நான் வைத்திருந்த பணத்தை அவர்கள் 2 பேரும்தான் எடுத்துக்கொண்டு இறங்கி இருக்க வேண்டும் என்று பதறியபடி கூறினார்.
சாமர்த்தியமான நடவடிக்கை
இதை கேட்ட டிரைவர் கணேசன்-கண்டக்டர் சுப்பிரமணி ஆகியோர் சாமர்த்தியமாக ஒரு திட்டம் தீட்டினார்கள். கொள்ளையர்கள் இறங்கிய இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம்தான் பஸ் வந்து இருக்கிறது. அதனால் இருவரையும் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு பஸ்சை மீண்டும் வந்த வழியை நோக்கி திருப்பினார்கள்.
முன்னெச்சரிக்கையாக பஸ்சின் முன்பகுதியில் இருந்த சேலம் என்ற பெயர் பலகை அகற்றப்பட்டது. அந்த மர்ம மனிதர்கள் இறங்கிய இடமான விஜயமங்கலம் நோக்கி பஸ் சென்றது. எதிர்பார்த்தது போலவே அந்த மர்ம மனிதர்கள் இருவரும் கையை காட்டி பஸ்சை நிறுத்தினார்கள்.
மடக்கி பிடித்தனர்
டிரைவரும் பஸ்சை அவர்கள் பக்கம் நிறுத்தினார். அந்த மர்ம மனிதர்கள் பஸ்சில் ஏறியபோதே, இது நாம் ஏற்கனவே வந்த பஸ் மாதிரி தெரிகிறதே என்று பேசிக்கொண்டே ஏறினார்கள். அத்துடன் கண்டக்டரை பார்த்ததும், டேய், இது அதே பஸ்தாண்டா இறங்கி ஓடு என்று குரல் கொடுத்துக்கொண்டு தப்பிஓட முயன்றனர். அதற்குள் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் அனைவரும் அந்த மர்ம மனிதர்களை சுற்றி வளைத்து பிடித்துக்கொண்டனர்.
இது தொடர்பாக பெருந்துறை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும் அங்கு விரைந்து வந்து மர்ம மனிதர்கள் இருவரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பணம் மீட்பு
விசாரணையில், அவர்கள் கோவை காரமடை ரங்கநாதர் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜன் (42), கும்பகோணத்தை சேர்ந்த பழனிவேல் (43) என்பது தெரியவந்தது. இருவரும் சேகரிடம் பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்த பணம் ரூ.5 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான இருவரும் கூறுகையில், வியாபாரி சேகர் மாதம் தோறும் பணம் வசூலுக்காக வருவார். திட்டமிட்டு இந்த கொள்ளையை நடத்தினோம். குளிர்பானம் வாங்கி அதில் மயக்க மாத்திரை கலந்து அவருக்கு கொடுத்தோம். மயங்கியதும் பணத்தை கொள்ளை அடித்தோம் என்றனர்.
சாமர்த்தியமாக பஸ்சை திருப்பிச்சென்று மர்ம ஆசாமிகளை பிடித்துக்கொடுத்த டிரைவர்-கண்டக்டரை போலீசார் மற்றும் பயணிகள் பெரிதும் பாராட்டினார்கள்.

நன்றி : தினத்தந்தி...

கொள்ளை அடித்து வித்தியாசமாக மாட்டியவர்கள்... :)

http://majinnah.blogspot.com/2008/03/blog-post_6912.html

Friday, March 21, 2008

இஸ்லாத்தில் பெண்ணியம் - ஒரு புரிதல்

பெண்ணியம் தொடர்பான சில அடிப்படை விஷயங்களை சகோதரர்கள் புரிந்து கொண்டால் நலம் என்று நினைக்கிறேன் . பிரச்சனையின் முழுப் பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்கு அவை துணைபுரியும். ஏனென்றால், யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் அதைப் பற்றிய அடிப்படையான அறிவு இருக்கின்றதோ, இல்லையோ பேசலாம் என்பது இப்போதெல்லாம் ஒரு புதிய மரபாக ஆகி வருகின்றது. பெண்ணியம் என்றால் என்ன? என்பது பற்றி அனைத்து வாசகர்களும் நன்கு விளங்கி வைத்திருப்பார் கள் என்று நான் கருதவில்லை.

ஆதி காலந்தொட்டே பெண்ணினம் ஏதோ ஒரு வகையான அடக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டே வந்துள்ளது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனித வரலாற்றைப் பார்த்தோமென் றால் எப்போதெல்லாம் சத்திய நன்னெறி பின் தள்ளப்பட்டு அசத்திய கோட்பாடுகள் தலையெடுத்தனவோ அப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா சமூக அவலங்களும் அரங்கேறியுள்ளன. அவற்றுள் முன் வரிசையில் பெண் அடக்கு முறை இடம் பிடிக்கின்றது. இறைத்தூதர்கள் வழியாக இடையிடையே இஸ்லாமிய நன்னெறி புத்துயிர் பெற்ற போதெல்லாம் பெண்ணுக்கு அவளுடைய இயல்பான உரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது.

வரலாற்றில் ஆணித்தரமாக பதிவாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்ணியக் கொள்கை தலையெடுத்தது. பெண் விடுதலைக்கான வாசல் திறந்தது, என்பதை படிக்கலாம். ஆனால், உண்மை நிகழ்வுகளை அலசிப் பார்த்தோமென் றால் பெண்ணுக்கான உண்மையான சுதந்திரம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமின் மூலமாகத்தான் கிடைத்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த ஊரை, தான் பேசும் மொழியை, தான் பின்பற்றும் சமய நெறியை விரும்பி நேசிக்கத் தான் செய்கிறார்கள் . எல்லை கடந்து போய் சிலரிடம் இது வெறியாக மாறிவிடுவதும் உண்டு! அத்தகைய ஒரு சமயப்பற்றினால், நாம் இவ்வாதத்தை முன் வைக்கவில்லை. மனிதகுலத்திற் கான விடுதலையே இஸ்லாமின் மூலமாதத்தான் சாத்தியம் என்று நாம் கூறுகிறோம். வரலாற்று அரங்கில் குறைந்த கால கட்டம் தான் என்றாலும் அதைப் பரீட்சித்துக் காட்டி இருக்கிறோம். மனித குல விடுதலையே இஸ்லாமின் மூலமாகத் தான் என்னும் போது பெண் இனமும் கண்டிப்பாக அதில் அடங்கத்தானே செய்யும்!

சமவுரிமை, சமத்துவம் என்றெல்லாம் பேசும் இன்றைய பெண்ணிய சிந்தனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறப்பெடுத்தது. கற்பனைச் சமூகவியலாளரான சார்லஸ் ப்யூரியே என்பவர் தாம் முதலில் பெண்ணியம் (Feminisme) என்ற சொல்லை 1837 இல் கையாண்டார். அதன் பின்பு அது தொடர்ந்து வளர்ச்சியடைந் து கொண்டே சென்று இன்று விமர்சனங்களின் விளிம்பில் வந்து நிற்கின்றது.

ஓரிடத்தில் உரிமைகள் மறுக்கப்படுகின் றன, நசுக்கப்படுகின் றன என்றால் அவற்றைப் பெறவும் மீட்டெடுக்கவும் அங்கே பாதிப்படைந்தவர் களால் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. கருத்து மோதல்கள் கிளம்புகின்றன. போராட்டங்கள் வெடிக்கின்றன! எந்தெந்தக் காரணங்களால் இவ்வுரிமைகள் பறிக்கப்பட்டனவோ அவற்றைக் குறி வைத்தே இவ்வெதிர்வினைச் செயற்பாடுகள் அமைகின்றன. இக்கண்ணோட்டத்தில் பெண்ணியம் பேசும் உலகளாவிய குழுக்களை கீழ்க்காணும் ஏழெட்டுப் பிரிவுகளில் வகைப்படுத்தலாம் . அப்பிரிவுகளின் தலைப்புகளே பின்னணிக் காரணங்களை விளக்கி விடும் என்பதால் வகைப்படுத்துவதோடு நாம் நின்று கொள்கிறோம் .

சமஉரிமை, சமத்துவம் கோரும் குழுக்கள் (Egalitarian Forms)

தாயார் சமூக அமைப்புக் குழுக்கள் (Gynocentric Forms)

ஆணாதிக்க எதிர்ப்புக் குழுக்கள் (Belief Inoppression bg Patriarchty)

பிரிவினைவாதக் குழுக்கள் (Segregatailnalist)

நிலம் சார்ந்த குழுக்கள் (African American)

மேற்குலகு தாண்டிய குழுக்கள் (Non-Western)

பாலியல் சுதந்திரம் பேசும் குழுக்கள் (Pro-sex Feminism)

நம்முடைய இறை நம்பிக்கையும் ஈமானும் சரியாக இருக்கின்ற பட்சத்தில் இந்த இடத்தில், இத்தகைய பின்னணிக் காரணங்கள் இஸ்லாமிய சமூக அமைப்பினுள் நிலவுகின்றனவா? என்று கேட்பதை விட, இத்தகைய பின்னணிக் காரணங்கள் இடம் பெற இஸ்லாமியக் கோட்பாடு அனுமதிக்கின்றதா? என்று கேட்பதற்கே முன்னுரிமை அளிப்போம். இவ்விரண்டு கேள்விகளுக்கும் இடையிலான அடிப்படை அதே சமயம் அதிமுக்கிய வேறுபாட்டை விளங்கிக் கொண்டால் இன்றைக்கு ஒரு சிலர் இஸ்லாமியப் பெண்ணியம் என்று அறிவுக்குச் சம்பந்தமே இல்லாமல் மனதில் தோன்றியதையெல் லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழல் தோன்றியிருக் காது.

ஏனென்றால், யூதப் பெண்ணியம், கறுப்புப் பெண்ணியம், பிரெஞ்சுப் பெண்ணியம், ஆப்பிரிக்கப் பெண்ணியம். கிறிஸ்துவப் பெண்ணியம், இந்து மதப்பெண்ணியம் என்றெல்லாம் நிலம் சார்ந்த, இனம் சார்ந்த, சமயம் சார்ந்த பெண்ணியக் குழுக்கள் காணப்படுவதைப் போல இஸ்லாமியப் பெண்ணியம் என்று உலக அரங்கில் காணப்படுவதில் லை (அதைத் தோற்றுவிக்க ஒருசிலர் வலுக்கட்டாயமாக முயற்சிக்கிறார் கள்) ஏன்? என்ன காரணம்? என்றால் எந்த விதமான உட்காரணங்களும் அறவே இல்லை என்பதால் இஸ்லாமியப் பெண்ணியம் தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகளும் அடியோடு கிடையாது.

ஒரு கொள்கையோ, கோட்பாடோ பெண்ணை மனுஷியாகக் கருத மறுத்தால், அவளை அடக்கி வைக்கவும் அடிமைப்படுத்தவும் நினைத்தால், அவளிடம் புதைந்துள்ள திறதமைகளை வெளிக்கொணர விடாமல் தடுத்தால் நாம் அதை உட்காரணம் என்று கூறுகிறோம்.

ஒரு கொள்கையைப் பின்பற்றும் மக்கள், பின்பற்றாளர் கள் அதனை முறையாக பின்பற்றாததால் தோன்றும் பின் விளைவுகளை நாம் புறக்காரணம் என்று வகைப்படுத்துகிறோம் .

இஸ்லாமிய வட்டத்திற்குள் பெண் விடுதலை என்கிற பேச்சே எழ வாய்ப்பில்லை. ஏனெனில் அதற்கான உட்காரணம் ஒன்று கூட இங்கு காணப்படவில்லை என்று நாம் கூறுவதால் இஸ்லாமியப் பெண்கள் அனைவரும் சமூக அளவிலும், கல்வி, பொருளாதாரத்திலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடையப் பெற்று மேனிலையில் விளங்குகிறார்கள் என்று சாதிப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. நம்முடைய பெண்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் தான் உள்ளார்கள் என்பதையோ, அதற்கான மூலக் காரணங்களை இனங்கண்டறிந்து நீக்குவதில் முனைந்து செயற்பட வேண்டும் என்பதையோ நாம் ஒரு போதும் மறுக்கவில்லை.

உட்காரணம், புறக்காரணம் என்பவை பற்றிய முறையான புரிதல் எதுவும் இல்லாமல், ஆழ்ந்து சிந்திக்கும் திறன், சீர்தூக்கிப் பார்க்கும் போக்கு எதுவுமே இல்லாமல், மேற்கண்ட எல்லாவகையான பெண்ணியக் கொள்கைகளுக்கும் அமைந்துள்ளதைப் போன்றே, முஸ்லிம் பெண்களின் கீழ் நிலைக்கும் இஸ்லாமிய சமயத்தில் உள்ள குறைபாடுகளும் கோளாறுகளும் தான் காரணம் என்று வெள்ளாடுகளைப் போல மேலோட்டமாகப் புரிந்து கொண்டும், அதிமேதாவித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டும் சிலர் எக்கச்சக்கமாக பேசிக் கொண்டுள்ளார் கள். இத்தகைய வெள்ளாடுகளை கறுப்பு ஆடுகளாக எப்படியாவது மாற்றி இஸ்லாமின் மீது சேற்றையும் சகதியையும் வாரியிறைத்து விட வேண்டும் என்று உலகளாவிய அளவில் சில சக்திகள் தொடர் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. இறையருளால் இத்தகு முயற்சிகள் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவதில்லை என்பதோடு, உட்காரணம் எதுவும் உண்மையிலேயே இல்லாததால் அவை தோல்வியையே தழுவும்.

இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். கட்டுரைக்கு இடையில் சம்பந்தமில்லாமல் வந்து விட்ட விஷயம் என்றாலும் கவனித்தாக வேண்டிய விஷயம். இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிற நான், இறைவனுக்கு பயந்து நான் அறிந்த சில விஷயங்களை சகோதரர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், நாளை அதற்கான விசாரணையை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற பயத்தில் எழுதிக் கொண்டுள்ளேன் . இறைவனைப் பற்றிய பயம் என்னை எழுதத் தூண்டுகின்றது. இறைநம்பிக்கை, இறையருள் என்கிற சொற்களைப் பயன்படுத்துகிறேன் . அதே சமயம், இஸ்லாமியப் பெண்ணியம் என்று பேசுபவர்களுடைய, முஸ்லிம் பெண்களைப் பார்த்து பரிதாபப்பட்டு எழுத்தாணியை ஏந்துபவர்களை உன்னிப்பாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இத்தகைய ஒரு பார்வையையே காண முடியாது!

ஒரே இறைவன் தான் என்பது நம் கொள்கை!. ஒரே இறைவன் தான் என்பதால் அவனால் படைக்கப்பட்ட அனைத்து மக்களும் சரிசமமானவர்கள் !!. வெள்ளை கறுப்பு பாகுபாடுகள், நிற வேறுபாடுகள், ஆண்பெண் பிரிவினைகள் அறவே கிடையாது. ஆணை விட பெண் தாழ்ந்தவள் அல்ல என்று நாம் கூறுகிறோமென்றால் அதற்கான அடிப்படை அம்சம் இங்கு தான் இருக்கின்றது. மேலுலகில் இருந்து கருத்துக்களைத் தருவித்துக் கொண்டிருக்கும் இறக்குமதியாளர் கள் (இறங்கு மதியாளர் கள்) இந்த இடத்தில் வேறுபடுகிறார்கள் .

பெண்களின் முன்னேற்றத்திற் காகப் பாடுபடுவதும் அதற்காக முனைந்து உழைப்பதும் தான் பெண்ணியம் என்றால் இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலை என்ன? சமூக அளவிலும், குடும்ப அளவிலும். கல்வி, பொருளாதார நிலைகளிலும் அவர்கள் எங்ஙனம் காணப்படுகிறார் கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இன்ஷா அல்லாஹ் அவற்றை அடுத்த கட்டுரையில் காண்போம்.

அதே சமயம் பெண்களின் உரிமைகளாக பெண்ணியக் குழுக்கள் முன் வைக்கும் சம உரிமை, ஆண்களுக்கு நிகரான வேலைவாய்ப்புகள், தனித்துவம், பாலியல் சுதந்திரம், ஓரினச் சேர்க்கை, போன்றவற்றைப் பற்றி இஸ்லாம் என்ன கருதுகின்றது என்பதையும் நாம் பார்த்தாக வேண்டியிருக்கிறது.

இஸ்லாமிய சமூகம் என்பது இறைத்தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைவனின் பேரருள் அவர் மீது உண்டாகட்டும்) அவர்களுடைய வார்த்தைகளில் ஓருடலைப் போன்றது. உடலில் ஒரு நோய் தோன்றிவிட்டால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி மழுப்புவது அறிவுடைமை ஆகாது. நோய் நாடி நோய் முதல் நாடி கண்டடைந்து நீக்க முயல வேண்டும். முஸ்லிம் பெண்கள் இன்று எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் படுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது நம் உள்ளம் பதறுகின்றது. இறைவனிடம் அவர்களுக்காக மன்றாடுகிறோம் . தலாக், வரதட்சணை, அடக்கு முறை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள் போன்று எத்தனை எத்தனையோ தளைகளை அவர்கள் தங்கள் கழுத்துக்களில் சுமந்து கொண்டுள்ளார் கள். இவற்றையெல்லாம் எதிர்க்க வீறு கொண்டு நாம் போராடுவோம். பெண்ணியம் என்கிற பேனரின் கீழ் அல்ல!

நம் இனப் பெண்கள் இன்னலுறுகிறார் களே என்கிற அக்கறையினாலும் அல்ல, இறைவனும் இறைத்தூதரும் கடமையாக்கியுள்ள காரணத்தினால் ....... நாளை விசாரணை நாளன்று வல்ல இறைவனுக்கு முன்னால் குற்றவாளிகளாய் நிற்க வேண்டியிருக்குமே என்கிற பயத்தினால்.. ....

தலைப்பு : பெண்ணியம் சில புரிதல்கள்

முஸ்லிம்களுக்கு இடையே உரையாற்றியவர் : சையத் அப்துர் ரஹ்மான் உமரி

நன்றி : தமிழ் முஸ்லிம் இணையக் குழு

Tuesday, March 18, 2008

கண்ணன் சீதா திருமணம் - Exclusive Videos

சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு அருகில் கண்ணன் என்பவருக்கும் சீதா என்பவருக்கும் இடையே அனைத்து சடங்குகளுடன் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. இது ஒரு வித்தியாசமான திருமணம். இது பற்றிய கண்மணி டீச்சரின் பதிவு



நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கடைசிக் காட்சி தணிக்கை செய்யப்பட்டு விட்டது. :)

Friday, March 7, 2008

அழையா விருந்தாளியாய் சில பாடல்கள்

கண்மணி டீச்சரின் தொடர் விளையாட்டுக்கு நம்மைக் கூப்பிடாவிட்டாலும் நமது பங்குக்கான பாடல்.
எங்களது ஊரில் சிறுமிகள் இரண்டு குழுவாக இணைந்து ஓடி விளையாடுவார். ஒரு அணியில் உள்ள ஒருவரை மற்றொரு அணியைச் சேர்ந்த சிறுமி தொட்டு ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். இரண்டு தரப்பையும் சேர்ந்த இரு சிறுமிகளைத் தேர்ந்தெப்பதற்க்கானப் பாட்டு தான் இது. ஒரு அணியில் அனைவருக்கும் பூக்களின் பெயர்களைக் கொண்டு பேர் இடப்படும். நடுவருக்கும் இது தெரியும். பின்னர் இரு அணியினரும் எதிரெதிரே நின்று கொண்டு தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு கோரசாகப் பாடுவார்கள்.
@ &
@ &
@ &
@ &
@ &


முதல் அணி : பூப்பறிக்க வருகிறோம்! பூப்பறிக்க வருகிறோம்!

இரண் அணி : எந்த மாதம் வருவீர்கள்! எந்த மாதம் வருவீர்கள்!

முதல் அணி : ஆடி மாதம் வருகிறோம்!ஆடி மாதம் வருகிறோம்!

இரண் அணி :எந்தப் பூவைப் பறிப்பீர்கள்!எந்தப் பூவைப் பறிப்பீர்கள்!

முதல் அணி : மல்லிகைப் பூவைப் பறிக்கிறோம்!
மல்லிகைப் பூவைப் பறிக்கிறோம்!


இரண் அணி : யாரை விட்டு அனுப்புவீர்கள்!யாரை விட்டு அனுப்புவீர்கள்!

முதல் அணி : அமுதாவை விட்டு அனுப்புகிறோம்!அமுதாவை விட்டு அனுப்புகிறோம்!

இதில் பூவின் பெயரும், சிறுமியின் பெயரும் மட்டும் மாறும்.

################################################

இது எனது மகனுக்கு மிகவும் பிடித்த பாடல். இதை காக்கா என ஆரம்பித்து @#$%%^&**%$###%%^^&&*(())__*^%$##$% ஏதேதோ சொல்லி வாவா என்று முடிக்கும் அழகே அழகு. :)

காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குருவி கொண்டைக்குப் பூ கொண்டு வா
கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா
கொக்கே கொக்கே குழந்தைக்கு தேன் கொண்டு வா